‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாள திரையுலகில் செகண்ட் இன்னிங்க்ஸில் களம் இறங்கி கடந்த மூன்று வருடங்களாக நடித்து வரும் மஞ்சு வாரியாருக்கு தற்போது இறங்குமுகம் என்றே தெரிகிறது.. கடந்த வருடத்தில் அவர் நடித்த 'கரிங்குன்னம் சிக்சஸ்' படம் மட்டுமே அவருக்கு சொல்லிகொள்ளும்படியாக அமைந்தது.. மற்ற படங்களில் வந்தோம் நடித்தோம் என்பதாகவே இருந்தது அவரது கேரக்டரும் நடிப்பும். தவிர கடந்த வருடம் அவரது முன்னாள் கணவர் திலீப், நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டது, அதுவும் தனது மகள் ஆதரவுடன் இப்படி நடந்தது மஞ்சு வாரியாரை ரொம்பவே பாதித்துவிட்டதாம்..
இதனால் சினிமாவில் நிற்க நேரமில்லாமல் சுறுசுறுப்புடன் இறங்கினால் மட்டுமே இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடமுடியும் என நினைக்கிறார் மஞ்சு வாரியர். அதற்கேற்றார்போல பிரபல மலையாள இயக்குனர் கமல் தான் இயக்கும் 'ஆமி' படத்தில் மஞ்சு வாரியரை கதாநாயகி ஆக்கிவிட்டார். இதை தொடர்ந்து பி.உன்னி கிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படத்திலும் அவருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு மஞ்சு வாரியரை தேடிவந்துள்ளது.. இரண்டு வருடங்களுக்கு முன் 'என்னும் எப்பொழும்' படத்தில் மோகன்லாலுடன் மஞ்சு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு வாய்ப்புகளால் மீண்டும் மேலேறி வந்துவிடலாம் என தெம்பாக இருகிறாராம் மஞ்சுவாரியர்.