மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபலங்களையும், டிவிட்டரையும் சீக்கிரமே பிரித்து விடலாம் போலிருக்கிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் த்ரிஷா, விஷால் ஆகியோர் டிவிட்டரை விட்டு விலகியது போல அடுத்து நடக்கும் விவகாரங்களில் இன்னும் பலர் விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், யார் விலகினாலும் இயக்குனர் ராம்கோபால் வர்மா மட்டும் விலகவே மாட்டார். மீடியாக்களால் அதிகம் கவனிக்கப்படும் எந்த ஒரு விஷயத்திலும் ராம்கோபால் வர்மா தன்னுடைய கருத்துக்களைச் சொல்லாமலே இருக்க மாட்டார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் போலவே ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க அங்குள்ள இளைஞர்கள் நேற்று முதல் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். ஆனால், ஆளும் மாநில அரசு அதை வளரவிடாமல் தடுத்து விடுகிறது. இதனிடையே, இந்த போராட்டத்திற்கு பவன் கல்யாண் ஆதரவு அளிப்பதை பாராட்டி வந்த ராம்கோபால் வர்மா, இன்று குறை கூற ஆரம்பித்தார். பவன் கல்யாண் டிவிட்டரில் மட்டும் செயல்படுவதை விட்டுவிட்டு போராட்டத்தில் நேரடியாக இறங்க வேண்டும் என்றார்.
இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த பவன் கல்யாணிடம் அப்போது இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “ராம் கோபால் வர்மா பற்றி முதலும், கடைசியுமாகப் பேசி இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறேன். அவர் 50 வயதைக் கடந்துவிட்டார். அவருடைய மகளுக்கும் சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும், இப்போதும் ஆபாசப் படங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன் என அவர் கூறியுள்ளார். இந்த வயதிலும் ஆபாசப் படங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன் எனக் கூறுபவரைப் பற்றி என்ன பேசுவது,” என பவன் கல்யாண் கூறினார்.
பதிலுக்கு ராம்கோபால் வர்மா, 'பவன் கல்யாண் 3 திருமணங்கள் செய்து கொண்டதைப் பற்றி நான் ஏதாவது சொல்லியிருக்கிறேனா ?,” என பதிலடி கொடுத்துள்ளார்.
சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி ராம்கோபால் வர்மா தொடர்ந்து தாறுமாறாக டிவீட் செய்து வருவது தெலுங்கு ரசிகர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.