‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த ஹன்சிகா தமிழ் படங்களில் நடிக்க துவங்கியதும் தெலுங்கு பட வாய்ப்புகளை புறக்கணிக்க துவங்கினார். தெலுங்கில் ரவிதேஜாவுடன் பவர் எனும் படத்தில் ஹன்சிகா இறுதியாக நடித்திருந்தார். அப்படத்திற்கு பின்னர், தெலுங்கு படங்களில் நடிக்காத ஹன்சிகா நிரந்தராமாக கோலிவுட்டில் குடியேறிவிட்டார். தற்போது தமிழிலும் படவாய்ப்புகள் குறையவே மீண்டும் டோலிவுட் பக்கம் ஹன்சிகா திரும்பியுள்ளார். இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் ஹன்சிகா நடித்துள்ள லக்குனோடு எனும் தெலுங்கு திரைப்படம் ஜனவரி 26ல் திரைக்கு வர தயாராகியுள்ளது. கீதாஞ்சலி, திரிபுரா போன்ற திகில் படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் ராஜ் கிரண் இயக்கியுள்ள லக்குனோடு படத்தில் மஞ்சு விஷ்ணு நாயகனாகவும் நாயகியாக ஹன்சிகாவும் நடித்துள்ளார். சத்ய நாராயணா தயாரித்துள்ள இப்படத்தில் வெண்ணிலா கிஷோர், பூஷ்னி கிருஷ்ண முரளி, சத்யம் ராஜேஷ், பிரபாஸ் ஸ்ரீனு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் புரமோஷனில் பங்கேற்ற ஹன்சிகா, இனி தான் தெலுங்கு படங்களில் அதிகாமக நடிக்கப்போவதாக கூறியுள்ளார். ஹன்சிகாவை மீண்டும் டோலிவுட் ரசிகர்கள் ஆதரிப்பார்களா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்..