மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த படத்துக்கு, டிக்கெட் கிடைக்காத விரக்தியில், அவரது ரசிகர், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.பிரபல தெலுங்கு நடிகர், சிரஞ்சீவி, அரசி யலில் ஈடுபட்டதால், சில ஆண்டுகளாக படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார். அரசியலில் அவருக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை; இதனால், மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிஉள்ளார். அவர் நடித்த, கைதி நம்பர் - 150 என்ற திரைப்படம், நேற்று முன்தினம் திரைக்கு வந்தது. முதல் நாளே அந்த படத்தை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், ரசிகர்கள் திரையரங்குகள் முன் குவிந்தனர். விசாகபட்டினத்தை சேர்ந்த, நாகராஜு என்ற ரசிகர், முதல் நாளிலேயே திரைப்படத்தை பார்த்து விடும் ஆவலில், திரையரங்கிற்கு சென்றார்; அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. விரக்தி அடைந்த அவர், பிளேடால், தன் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்தவர்கள், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்து இல்லை என, மருத்துவர்கள் கூறியதால், சிகிச்சைக்கு பின், மீண்டும் திரையரங்கிற்கு வந்த அவர், டிக்கெட் பெற்று, படத்தை பார்த்தார்.
சறுக்கிய அரசியல் களம் : நடிகர், தொழில் அதிபர், படத் தயாரிப்பாளர் என, பன்முகத்தன்மை உடைய, சிரஞ்சீவி, 2008ல், பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை துவக்கினார். 2009ல் நடந்த, ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட இவரது கட்சி, மொத்தமுள்ள, 295 இடங்களில், 18ல் வெற்றி பெற்றது. சிரஞ்சீவி, திருப்பதி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வானார். 2011ல், பிரஜா ராஜ்ஜியம் கட்சியை, காங்கிரசுடன் இணைத்த அவர், 2012ல் காங்., கட்சியின் சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு, தனிப் பொறுப்புடன் கூடிய மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. 2014ல் ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின் நடந்த ஆந்திர சட்டசபை, லோக்சபா தேர்தலில், காங்., கட்சியின் பிரசார பீரங்கியாக சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்தார். எனினும், இரு தேர்தல்களிலும், காங்., படுதோல்வி அடைந்தது. இது, சிரஞ்சீவியின் அரசியல் வாழ்வில் பெரும் சறுக்கலாக அமைந்ததால், மீண்டும் நடிப்பில் களம் இறங்கியுள்ளார்.