‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல தெலுங்கு காமெடி நடிகர் பொட்டி ரமேஷ் மனைவி திரிபுரம்பிகா தற்கொலை செய்து கொண்டார். ரமேஷ் கொடுமைப்படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
நடிகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷ் தெலுங்கு படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். உயரம் குறைவான காமெடி நடிகர். இவருக்கும் நெல்லூரைச் சேர்ந்த திரிபுரம்பிகா (வயது 22) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. விசாகபட்டினம் கஜுவேகா பகுதியில் வசித்து வந்தனர்.
திருமணம் ஆகி ஒருவருடம் கூட ஆகியிருக்காத நிலையில் திரிபுரம்பிகா வீட்டின் படுக்கை அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து பொட்டி சுரேசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்தார். மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இந்த நிலையில் பொட்டி ரமேசும், அவரது குடும்பத்தினரும் திரிபுரம்பிகாவை கொடுமைப்படுத்தி வந்தனர் என்றும் திரிபுரம்பிகா இதுபற்றி தங்களிடம் கூறியிருப்பதாகவும் எனவே தற்கொலைக்கு தூண்டியதாக பொட்டி ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று திரிபுரம்பிகாவின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.