மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்த வருடம் 'பென்சில்', 'கிடாரி' என இரண்டு படங்களில் தனது குணச்சித்திர நடிப்பால் பாராட்டுக்களை பெற்றார் நடிகை சுஜா வருணீ.. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் ஜெயராம் நடிக்கும் 'அச்சாயன்ஸ்' என்கிற படத்தில் முக்கியமான ரோலில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.. சமீபத்தில் நடைபெற்ற பேட்மிண்டன் லீக் போட்டிகளில் சென்னை அணியை உற்சாகப்படுத்தும் விதமாக கலந்துகொண்டவரிடம் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறித்து பேசியுள்ளார் மலையாள குணச்சித்திர நடிகர் இடவேள பாலு.. அங்கேயே படத்தின் கதாநாயகன் ஜெயராமும் இருந்ததால் அவரும் உடனே ஒகே சொல்லிவிட்டார்..
ஏற்கனவே சுரேஷ்கோபி நடித்த 'பிளாக் டாலியா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சுஜா வருணீ.. இது அவருக்கு மலையாளத்தில் இரண்டாவது படம்.. இந்தப்படத்தில் கிராமம் ஒன்றில் நடக்கும் குற்றம் ஒன்றை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் சுஜா. சமீபத்தில் வாகாமன் பகுதியில் இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் சுஜா வருணீ. அங்கே அவருக்கு இன்னொரு சர்ப்ரைஸ் ஷாக்காக இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜுடன் சேர்ந்து நடிக்க வேண்டிய காட்சிதான் படமாக்கப்பட இருந்ததாம். மலையாளத்தில் மீண்டும் நடிப்பதுடன், பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தாராம் சுஜா வருணீ.