மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

சுமார் 20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் தான் இருவர்.. டப்பிங் படங்கள் மூலமாக மட்டுமே தமிழ் ரசிகர்கள் கண்டுகளித்த மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை இந்தப்படத்தில் நடிக்க வைப்பதற்காக முதன்முதலாக தமிழுக்கு அழைத்து வந்தார் மணிரத்னம். மோகன்லாலை இந்தப்படத்தில் நடிக்க வைத்ததற்கு காரணம் இந்தப்படத்தின் கதை தான். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூவரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
அரசியல் சம்பந்தப்பட்ட இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க தமிழ் முன்னணி நடிகர்கள் பலரும் தயங்கினார்கள். அதனாலேயே எம்.ஜி.ஆர் வேடத்திற்கு மோகன்லாலை தேர்வுசெய்தார் மணிரத்னம். ஜெயலலிதா கேரக்டரில் ஐஸ்வர்யா ராயும், கலைஞர் கேரக்டரில் பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர்.. படம் விமர்சன ரீதியாக பேசப்பட்ட அளவுக்கு, உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட அளவுக்கு, வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.. ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி இருந்தாலும், தமிழில் தான் நடித்த முதல் படம் வெற்றி பெறவில்லையே என்கிற வருத்தம் மோகன்லாலுக்கு நிறையவே இருந்ததாம்.
அந்த சமயத்தில் தான் இந்தப்படத்தை பார்த்துவிட்டு அதில் மோகன்லாலின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக அவரை தொலைபேசி மூலமாக அழைத்து பாராட்டினாராம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. படத்தில் இடம்பெற்ற ஒரு வாழும் கதாபாத்திரம், அதிலும் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா தன்னை பாராட்டியதால், படம் தோல்வியடைந்த வருத்தம் மோகன்லாலிடம் இருந்து நீங்கியதாம்.