விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
விஜய் நடித்த கத்தி படத்தை அடுத்து அகிரா இந்தி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராகுல்ப்ரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர். துப்பாக்கி படத்தை போன்று ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு முதலில் வாஸ்கோடகாமா என்று டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால், பின்னர் அந்த செய்தியை மறுத்தார் முருகதாஸ். அதையடுத்து டைட்டீலை பிறகு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு படப்பிடிப்பில் இறங்கினார். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அந்த படத்திற்கு ஏஜென்ட் சிவா என்ற தலைப்பை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி வெளியானதை அடுத்து, அதற்கு மறுப்பு சொல்லாத ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் தலைப்பு இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது என்று கூறியுள்ளார். இருப்பினும், இந்த தலைப்பைதான் அவர் உறுதி செய்து வைத்திருப்பதாக அப்படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.