‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தனது மகன் பிரணவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் வேலையை தனது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான ஜீத்து ஜோசப்பிடம் கொடுத்துவிட்டார் மோகன்லால்.. அந்தப்படம் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்க இருக்கிறது.. இந்தநிலையில் அதற்கு முன்னதாக பிஜூமேனன் நடிக்கும் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார் என்கிற தகவல் அவர் மூலமாகவே வெளியாகியுள்ளது. படத்திற்கு 'தஸ்கரன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.. அதற்கு காரணமும் உண்டு.. இந்துகோபன் என்பவர் எழுதிய 'தஸ்கரன் ; ஒரு மனியம்பிள்ளயுடே ஆத்மகதா' என்கிற புத்தகத்தை தழுவித்தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம் ஜீத்து ஜோசப்..
இது பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய கொள்ளைக்காரனாக இருந்து, பின்னாளில் மக்களின் பாதுகாவலனாக மாறிய மனியம்பிள்ள என்கிற கொள்ளைக்காரனை பற்றிய கதை என்று சொல்லப்படுகிறது. தற்போது பிஜூமேனன் 'லட்சியம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டுத்தான் அடுத்ததாக 'தஸ்கரன்' படத்தில் நடிக்க இருக்கிறாராம்.. இந்த 'லட்சியம்' படத்தை புதியவரான அஸார் கான் என்பவர் இயக்கினாலும் படத்தின் கதையை எழுதியிருப்பவர் ஜீத்து ஜோசப் தான். அந்தவகையில் அடுத்தடுத்து ஜீத்து ஜோசப்பின் கதையில் நடிக்கும் பாக்கியசாலியாக மாறியுள்ளார் பிஜூ மேனன்.