பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
ஜெயராம் மகன் காளிதாஸ் தமிழில் முதன்முதலாக நடித்து வெளியான 'மீன்குழம்பும் மண்பானையும்' படம் மிகப்பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும், கூட அவருக்கு நல்ல அறிமுகத்தை தந்துள்ளது. அதுவே தற்போது அவர் மலையாளத்தில் நடித்துவரும் 'பூமரம்' என்கிற படத்திற்கான எதிர்பார்ப்பை கிளப்பியும் உள்ளது. என்னதான் காளிதாஸின் தந்தை ஜெயராமும் அவரது தாய் பார்வதியும் நடிகர்களாக இருந்தாலும் மகன் காளிதாஸ் சினிமாவில் நுழைய முடிவெடுத்தபோது, அவரது அம்மா பார்வதி மகனுக்கு ஒரு நிபந்தனை விதித்தார்..
அதாவது காளிதாஸ் படித்து முடித்து ஒரு டிகிரி சர்டிபிகேட்டை கையில் வாங்கிய பின்னர்தான் நடிக்கவேண்டும் என்பது.. அதன்படி லயோலா காலேஜில் டிகிரியை முடித்துவிட்டே நடிப்பில் இறங்கியிருக்கிறார் காளிதாஸ். அடிக்கடி நட்சத்திர தம்பதிகளுக்கும் விரிசல் எனும் செய்திகளை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு, ஜெயராம்-பார்வதி இருவரின் சந்தோஷமான குடும்ப வாழ்க்கை ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையுமே தரும்.. “எங்க அப்பா, அம்மாவுக்கும் சண்டை வரும்.. ஆனால் அந்த கோபமெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல நீடிக்காது. அதுதான் எங்கள் குடும்பத்தின் சந்தோஷ ரகசியம்” என்கிறார் காளிதாஸ்.