‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்த் திரையுலகில் உள்ள பல கலைஞர்கள் மிகவும் திறமைசாலிகள் என்பதை இந்தியத் திரையுலகமே ஏற்றுக் கொள்ளும். அந்த அளவிற்கு பலர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ்ப் படங்களின் ஒளிப்பதிவாளர்களுக்கு மற்ற மொழிகளில் பெரும் வரவேற்பு உண்டு. பல பெரிய ஹிந்திப் படங்களின் ஒளிப்பதிவாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் அடுத்து பவன் கல்யாண் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் இசையமைப்பாளர் அனிருத். இந்தப் படத்தின் மூலம் அவர் தெலுங்குத் திரையுலகில் நேரடியாக அறிமுகமாகிறார். இப்போது படத்தின் ஒளிப்பதிவாளராக நட்ராஜ் சுப்பிரமணியம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் நடிகரகாவும், ஹிந்தியில் பிரபலனமான ஒளிப்பதிவாளராகவும் உள்ள நட்ராஜ், த்ரிவிக்ரம் இயக்கிய 'அ..ஆ' படத்திற்கும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார். தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என தமிழ்க் கலைஞர்களுடன் தன்னுடைய அடுத்த படத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளார் த்ரிவிக்ரம்.