‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான கைதி நம்பர் 150, தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் தான். கத்தி பட இயக்குனர் ஏ.ஆர்..முருகதாஸ் தெலுங்கிலும் இப்படத்திற்கு திரைக்கதை அமைப்பை மேற்பார்வை செய்துள்ளாராம். இயக்குனர் விவி வி நாயக் இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகின்றார். இப்படத்தில் இடம்பெறும் குத்தாட்ட பாடலுக்கு ராய் லக்ஷ்மியுடன் குத்தாட்டம் போட்ட சிரஞ்சீவி பாடலின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு ஓய்வில் இருகின்றாராம். அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவில் உக்ரைன் செல்லவுள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கல் கூறுகின்றன. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வரும் சிரஞ்சீவிக்கு ஓய்வு தேவைப்படுவதால் சில நாட்களுக்கு பின்னர் உக்ரைன் செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.