‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தெலுங்கு திரைப்படம் ஒன்று தயாராகவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குனர் மதுரா ஸ்ரீதர் இயக்குகின்றார். குறைந்த செலவில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற பெல்லி சூப்புலு படத்தின் தயாரிப்பாளர் ராஜ் இப்படத்தை தயாரிக்கின்றார். விரைவில் துவங்கவிருக்கும் இப்படத்தின் திரையிடும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு விட்டது. 2018 பிப்ரவரி 17 ஆம் தேதி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பிறந்த நாள் அன்று இப்படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்திற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ள இயக்குனர், மதுரா ஸ்ரீதர் 2017 ஜூன் 2ல் இப்படத்தின் படப்பிடிப்புகளை துவங்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் பணியாற்றவிருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு விரைவில் துவங்கவுள்ளதாக தயாரிப்பாளர் ராஜ் கூறியுள்ளார்.