மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
1997ல் ஆக்ஷன் ஹீரோ சுரேஷ்கோபி நடிப்பில் மலையாளத்தில் வெளியான எவர்கிரீன் ஆக்ஷன் படம்தான் 'லேலம்'. கமர்ஷியல் ஆக்ஷன் படங்களின் பிதாமகன் என அழைக்கப்படும் ஜோஷிதான் இந்தப்படத்தை இயக்கினார். இந்தப்படம் வெளியானபோது 'படத்தின் முதல் பத்து நிமிட காட்சிகளை மிஸ் பண்ணிவிடாதீர்கள்' என்றெல்லாம் விளம்பரம் செய்தார்கள்.. இந்தபடஹ்தில் நம்ம வினுச்சக்கரவர்த்தி, சரண்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சூப்பர்ஹிட்டான இந்தப்படத்தின் கதையை, இப்போது பிரபல கதாசிரியரான ரெஞ்சி பணிக்கர் தான் எழுதியிருந்தார். சூப்பர்ஹிட் படங்களான மம்முட்டி நடித்த 'தி கிங்' படத்திற்கும் சுரேஷ்கோபி நடித்த 'கமிஷனர்' படத்திற்கும் அவர்கள் இருவரும் பிறகு இணைந்து நடித்த 'தி கிங் & கமிஷனர்' படத்திற்கும் கதை எழுதியது இவர்தான். கடந்த இரண்டு வருடங்களாக 'லேலம்' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் ரெஞ்சி பணிக்கர். 'லேலம்' படம் வெளியான சமயமே அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என பலர் கூறினார்கள். ஆனால் இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது” என்கிறார் ரெஞ்சி பணிக்கர்.
இந்தப்படத்திலும் சுரேஷ்கோபியையே கதாநாயகனாக நடிக்கவைக்க முயற்சி நடக்கிறது.. தற்போது அவர் ராஜ்யசபா எம்.பி.ஆக ஆகிவிட்டதால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. அதேபோல முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஜோஷிக்கு பதிலாக, ரெஞ்சி பணிக்கரின் மகனும் சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான 'கசபா' படத்தின் இயக்குனருமான நிதின் ரெஞ்சி பணிக்கர் இயக்கவுள்ளார்.