‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜோ அச்சுதானந்தா படத்திற்கு பின்னர் ரோஹித் போலீஸாக நடிக்கும் திரைப்படம் “அப்பட்லோ ஒகௌன்தேவடு”. பானம், ரௌடி ஃபெலோ, அசுரா போன்ற படங்களில் போலீஸாக மிரட்டிய ரோஹித் மீண்டும் “அப்பட்லோ ஒகௌன்டேவடு” படத்தில் போலீஸாக நடிக்கின்றார். சாகர் சந்திரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சன்னி ராஜூ மற்றும் ஹரி இணைந்து தயாரிக்கின்றனர். ரோஹித்திற்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அக்டோபரில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அக்டோபரில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட துருவா திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரோஹித் “அப்பட்லோ ஒகௌன்தேவடு” படத்தை அக்டோபரில் திரையிட தீவிரம் காட்டுகின்றாராம். ராம் சரண் நடிக்கும் துருவா படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் நிறைவடையாததால் துருவா படத்தின் வெளியீடு டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.