‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆரம்பம், பெங்களூர் நாட்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் ராணா, பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இந்திய அளவில் அறியப்படும் நடிகராகிவிட்டார். பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா, டுவிட்டரில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கின்றார். டுவிட்டரில் ராணாவை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்துள்ளது. இத்தகவலை மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பகிர்ந்துள்ள ராணா, ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் ராணா, இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் லீடர்-2, இயக்குனர் தேஜா இயக்கத்தில் நேனே ராஜு நேனே மந்திரி போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.