‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இதுநாள் வரை மலையாள சினிமாவில் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது மோகன்லால் நடிக்கும் 'புலி முருகன்'. வைசாக் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மற்ற படங்களைப்போல இல்லாமல் பெண்டு நிமிர்த்தும் ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன... ஆனாலும் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒகே சொன்ன மோகன்லால் இந்தப்படத்தின் சண்டைப்பயிற்சிகளுக்காக வியட்நாம் சென்று பயிற்சி எடுத்து வந்து நடித்துள்ளாராம். இந்தப்படத்தின் மிக முக்கியமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கிய பீட்டர் ஹெய்ன், அதில் மோகன்லாலின் வேகம் கண்டு மிரண்டு போனாராம்.
அந்த அளவுக்கு சண்டைக்காட்சியில் டூப் எதுவும் போடாமல் அசத்தியுள்ளார் மோகன்லால். ஆனால் இந்தப்படத்தில் பணியாற்ற ஹாலிவுட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட சண்டைக்கலைஞரான எரிக் நியூவிக் கல்லெட் என்பவரை மோகன்லாலுக்கு டூப்பாக பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியிருப்பதாக சில செய்திகள் கசிந்தன. படப்பிடிப்பெல்லாம் முடிந்து அக்டோபர்-7ஆம் தேதி படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில், மோகன்லால் டூப் போட்டாரா என்பது பற்றி பதிவிட்டுள்ளார் எரிக்..
அதில் “நான் மோகன்லாலின் ரசிகனோ அல்லது அவருக்கான டூப்போ அல்ல. புலிமுருகன் படத்தில் சண்டைக்கலைஞராக பணியாற்ற வந்த சண்டை கலைஞன்.. ஆரம்பத்தில் மோகன்லால் யார் என்றே எனக்கு தெரியாது. காரணம் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பணிபுரிந்தவன் நான். ஆனால் இங்கே வந்து பார்த்தபோது, 56 வயதான மோகன்லால் சண்டைக்காட்சிகளில் காட்டிய ஈடுபாடு என்னை திகைக்க வைத்து விட்டது.. அவர் ஒரு காட்சியில் கூட டூப் போடவில்லை.. அவர் மீது குற்றம் சொல்பவர்களே.. கவனியுங்கள்.. இந்த வயதில் உள்ள உங்கள் தந்தையோ, ஏன் குற்றம் சொல்லும் நீங்களோ கூட அவர் செய்துள்ள விஷயங்களில் ஒரு துளியளவு கூட செய்ய முடியாது.. அவ்வளவு ஏன்.. நானே சிரமப்பட ஒரு ஸ்டெப்பை மோகன்லால் அசாத்தியமாக செய்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்.. அந்த கலைஞனுக்கான உண்மையான மரியாதை, இந்தப்படத்தை நீங்கள் பார்த்து அவரின் வேகத்தை ரசிப்பதுதான்” என உணர்ச்சிவசப்பட்டு பொங்கிவிட்டார் மனிதர்...