மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிகளை குவித்து, அதன்பின் பல மொழிகளிலும் ரீமேக்கான படம் 'த்ரிஷ்யம்'. இந்தப்படத்தை பொறுத்தவரை அதில் மிக முக்கியமான இரண்டு கதாபாத்திரங்கள் மோகன்லாலை மட்டுமல்ல நம்மையும் சேர்ந்து மிரட்டுவார்கள். ஒன்று அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்திருந்த ஆஷா சரத். இன்னொருவர் எஸ்.ஐ ஆக நடித்த கலாபவன் சாஜன். கலாபவன் என்கிற நடிப்பு பட்டறையில் பட்டைதீட்டப்பட்டு நடிக்க வந்த கலாபவன் சாஜன், இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் புண்ணியத்தால் 'த்ரிஷ்யம்' படம் மூலம் கருப்பு வைரமாக வெளியே தெரிந்தார்..
வில்லன், குணச்சித்திரம், காமெடியன் என எந்த ஏரியாவிலும் கொடுத்த வேலையை பிசகில்லாமல் செய்யும் சாஜனுக்குள் இன்னொரு மனிதன் ஒளிந்துள்ளது இப்போதுதான் தெரியவந்துள்ளது. ஆம்.. அவருக்குள் இருக்கும் படைப்பாளி அவரை படம் இயக்க நீண்ட நாட்களாக தூண்டிவிட்டுக்கொண்டே இருந்திருக்கிறான். இப்போது பக்காவாக ஒரு ஸ்க்ரிப்ட்டை தயார்செய்து, அதை பிருத்விராஜிடமும் சொல்லி அவரை ஹீரோவாக நடிக்க வைக்க சம்மதமும் வாங்கிவிட்டார். பிருத்விராஜ் தற்போது கைவசம் உள்ள சில படங்களை முடித்ததும் அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.