மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, தமிழில் சர்ச்சைகளுடன் வெளிவந்து வெற்றி அடைந்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகின்றார். கைதி நம்பர் 150 என பெயரிட்டப்பட்டிருக்கும் இப்படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிரஞ்சீவியின் சகோதரரும் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான நாகபாபுவின் மகள் நிஹரிகா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது. “ஒக்க மனசு” படத்தின் வாயிலாக நாயகியாக அறிமுகமான நிஹரிகாவிற்கு அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த விவாதத்தில் ஈடுபட்டு வந்த நிஹரிகா சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிக்க சிரஞ்சீவியிடம் கோரிக்கை விடுத்திருந்தாராம். சிரஞ்சீவியும் நிஹாரிகா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இயக்குனரிடம் கேட்டு ஏற்பாடு செய்துள்ளாராம்.