‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நிவின்பாலி, அனுபமா பரமேஷ்வரன், சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் பலர் நடித்த பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் நேரடி மலையாள திரைப்படமான வெளிவந்து 225 நாட்களைக் கடந்து பெரும் வெற்றி பெற்றது. இப்படம் அதே தலைப்புடன் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. நாகசைதன்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், மடோனா செபஸ்டியன் அதே வேடங்களில் நடிக்கின்றனர். சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் வேடத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
இப்படத்தில் இடம்பெறும் “எவரே” எனும் பாடல் அண்மையில் வெளிவந்தது. இப்பாடலை ஒரு மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். மலையாள பிரேமம் படத்தில் இடம்பெற்ற மலரே எனும் பாடல் மலையாள ரசிகர்களை மட்டுமல்ல தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது தெலுங்கு திரைஉலக ரசிகர்களையும் இப்பாடலை முணுமுணுக்க துவங்கியுள்ளனர். மலரே பாடலின் மெட்டுடன் உருவாக்கப்பட்டிருக்கும் எவரே பாடலை விஜய் யேசுதாஸ் பாடியுள்ளார். இசயமைப்பாளர் ராஜேஷ் முருகேஷன் இசையமைத்துள்ளார்.