மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மலையாள சினிமாவின் மூத்த இயக்குனரான அடூர் கோபால கிருஷ்ணன் திரையுலகில் தனது 50வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார்.. 75 வயதான இவர், இந்த வயதிலும் தன்னால் படம் இயக்கமுடியும் என்கிற நம்பிக்கையுடன் திலீப், காவ்யா மாதவனை வைத்து 'பின்னேயும்' என்கிற படத்தை இயக்கினார். ஆனால் கடந்த வாரம் வெளியான இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை என்பதே உண்மை. அதேசமயம் மோசமான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது இந்தப்படம்.. அடூர் கோபால கிருஷ்ணன் தங்களை ஏமாற்றிவிட்டதாக தேசிய விருது படங்களை இயக்கும் வித்தகரான டாக்டர் பைஜூ தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
“இப்படி ஒரு படத்தை அடூர் கோபாலகிருஷ்ணனிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. சில அறிவு ஜீவிகள் இந்தப்படம் சூப்பர் என அடூர் கோபால கிருஷ்ணனை புகழ்ந்துகொண்டிருப்பதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. இன்றைய சினிமாவுக்கு ஏற்றவாறு அவர் தன்னை அப்டேட் பண்ணிக்கொள்ளவே இல்லை. காலத்திற்கு ஒவ்வாத கதையும் வசனங்களும் காட்சிகளுமாக மலையாள சினிமாவை பின்னோக்கி இழுத்துச்செல்லும் முயற்சியைத்தான் அவர் செய்துள்ளார். வயது ஒரு பொருட்டே அல்ல.. சத்யஜித்ரே, அகிரா குரோசோவா போன்றவர்கள் தங்களது 70 வயதுகளில் அற்புதமான படங்களை தந்தை நாம் மறந்துவிடமுடியாது” என வழக்கம்போல தனது கருத்தை அதிரடியாக வெளிப்படுத்தியுள்ளார் டாக்டர் பைஜ