தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் சினிமா வாழ்க்கையை த்ரிஷ்யத்துக்கு முன், த்ரிஷ்யத்துக்கு பின் என இரண்டு விதமாக பிரிக்கலாம். த்ரிஷயத்துக்கு முன் அவர் இயக்கிய படங்கள் டீசன்டான வெற்றிதான் என்றாலும், த்ரிஷயம் அவரை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்தது.. அதன் விளைவுதான் தமிழுக்கு வந்து கமலை வைத்து 'பாபநாசம்' இயக்கியது... இப்போது முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் மோஸ்ட் வாண்டேட் நபராக மாறியுள்ள ஜீத்து ஜோசப் பிருத்விராஜை வைத்து 'ஊழம்' என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டு இதோ செப்டம்பரில் ரிலீஸ் பண்ண காத்திருக்கிறார்.
அடுத்ததாக மம்முட்டியை வைத்து இயக்கவுள்ளார் என சொல்லப்பட்டு வந்தது.. அதை ஆரம்பத்தில் மென்மையாக மறுத்து ஜீத்து ஜோசப், மம்முட்டிக்கு இன்னும் கதை தயாராகவில்லை என்றும், ஆனால் மம்முட்டி படத்தை இயக்கப்போவதாக ஏற்கனவே தானும் அவரும் ஒப்பந்தம் பண்ணிக்கொண்டதாகவும் கூறியவர் இப்போது மம்முட்டிக்கு தோதான கதையை தயார்செய்து விட்டதாக கூறுகிறார்.. இதனிடையே த்ரிஷ்யம் வெற்றிக்குப்பிறகு மோகன்லாலுடன் ஏன் சேரவில்லை என அவரது ரசிகர்கள் அன்புத்தொல்லை பண்ணி வருகிறார்கள்.. மோகன்லாலுமே ஜீத்துவின் டைரக்சனில் மீண்டும் நடிக்க விரும்புகிறார். இதை தொடர்ந்து திலீப்-காவ்யா மாதவன் மற்றும் மீண்டும் பிருத்விராஜ் என கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு ஜீத்து ஜோசப் பிஸி தான்.