மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
முன்பெல்லாம் தானுண்டு தனது வேலையுண்டு என படங்களில் நடிப்பதை மட்டும் கவனித்து வந்த நடிகர் ஜெயசூர்யா, சமீபகாலமாக சமூக அக்கறையுடன் கூடிய விஷயங்களிலும் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அதன் ஒரு பகுதியாகத்தான் கேரளாவில் உள்ள சாலைகள் பற்றி 50 வினாடிகள் தான் பேசிய வீடியோ பதிவு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சாலைகளின் குறைவான தரம் மற்றும் மோசமான பரமாரிப்பு பற்றி குறிப்பிட்டிருந்த ஜெயசூர்யா, ஹெல்மெட் அணிந்துகொண்ட சாலையில் வண்டி ஒட்டிய இளைஞன் ஒருவன், மோசமான சாலையால் கீழே விழுந்து அடிபட்டதை தான் கண்ணார கண்டதாகவும் இதற்கு விமோசனமே இல்லையா என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்..
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த விஷயத்தை அவர் முதல்வர் பிணராயி விஜயனுக்கு கோரிக்கையாக வைத்ததும், எங்கள் மீது உங்களுக்கு உண்மையிலேயே அன்பும் மதிப்பு இருந்தால் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் வைத்ததும் தான். இதற்காக கேரளா முதல்வரோ அவரது ஆட்களோ ஜெயசூர்யா மீது கோபப்பட்டார்கள் என்றா நினைக்கிறீர்கள்..? நிச்சயமாக இல்லை.. காரணம் அது ஒன்றும் தமிழ்நாடு இல்லையே.. கேரளாவாயிற்றே. இந்த வீடியோ முதல்வரின் கவனத்துக்கு போக, அவர் உடனே ஜெயசூர்யாவை தொடர்புகொண்டு அவரது சமூக அக்கறையை பாராட்டியதோடு, குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ஜெயசூர்யாவின் படங்களை பற்றி குறிப்பிட்டு அதற்கான பாராட்டையும் வாழ்த்துக்களையும் கூட தெரிவித்துக்கொண்டாராம் முதல்வர்..
சில வருடங்களுக்கு முன் தான் வசிக்கும் வீடு இருந்த சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் தனது சொந்த செலவில் ஜல்லி, தார் என அனைத்தையும் கொண்டுவந்து சாலையை செப்பனிட்டார் ஜெயசூர்யா.. அனால் நகராட்சி அதிகாரிகளோ இதற்காக அவரிடம் பிரச்சனைக்கு சென்றார்கள் என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.