மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
துணிச்சலான நடவடிக்கைகளுக்கும் பேச்சுக்களுக்கும் சொந்தக்காரர் தான் மலையாள நடிகை பார்வதி.. தனது பெயரின் பின்னால் உள்ள மேனன் என்கிற ஜாதிப்பெயரே தேவையில்லை என அறிவித்து, அதன்படி தன்னை பார்வதி என்றே குறிப்பிட சொன்னவர். சமீபத்தில் கொச்சியில் செயின்ட் தாமஸ் கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்சியில் கலந்துகொண்டு பேசிய பார்வதி, தானும் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளேன் என பகிரங்கமாக கூறியுள்ளார். இத்தனைக்கும் இந்த விழாவில் கொச்சி எம்.எல்.ஏவும் கலந்துகொண்டார் என்பதுதான் விசேஷமே..
இந்த விழாவில் பேசிய பார்வதி, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமை, ஈவ் டீசிங் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்கள் மற்றது நடக்கும் தாக்குதல் இவற்றில் தானும் சிலவற்றை சந்தித்துள்ளதாகவும் கூறினார். மேலும் அவற்றில் இருந்து பெண்கள் தங்களையும் குழந்தைகளையும் பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை அழுத்தமாக கூறி கல்லூரி மாணவிகளின் கைதட்டலை அள்ளினார்.
இதன் அடுத்தகட்டமாக மேலே சொன்ன பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உருவாக்கப்படும் 'போதினி' என்கிற குறும்படத்திலும் நடித்துள்ளாராம் பார்வதி.