‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குனர் பிரதாப் போத்தன் டைரக்சனில் மலையாளத்தில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட துல்கர் சல்மானின் 'லவ் இன் ஏன்ஜெங்கோ' படம் கைவிடப்பட்டது என இரண்டு தினங்களுக்கு முன்பு சொல்லியிருந்தோம். இதற்கு பல காரணங்கள் யூகமாக சொல்லப்பட்டு வந்த நிலையில், உண்மையான காரணத்தை வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார் இயக்குனர் பிரதாப் போத்தன். இந்தப்படத்திற்கு அஞ்சலி மேனன் எழுதிய திரைக்கதை சரியில்லாததால் தான் இந்தப்படத்தை கைவிட்டதாக கூறியுள்ளார்.
'பெங்களூர் டேய்ஸ்' என்கிற பிளாக் பஸ்டர் படத்தை இயக்கியவர் தான் அஞ்சலி மேனன். அதுமட்டுமல்ல, துல்கர் சல்மான் நடித்த 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தில் சிறப்பான வசனங்களை எழுதியதற்காக சிறந்த வசனகர்த்தாவுக்கான தேசிய விருதும் பெற்றவர். இந்த காரணங்களால் தான் தனது படத்திற்கு திரைக்கதை எழுத அஞ்சலி மேனனை ஒப்பந்தம் செய்தார் பிரதாப் போத்தன்.. ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரியான திரைக்கதையை அஞ்சலி மேனன் எழுதவில்லையாம்.
தான் சினிமாவை ரசித்து வேலைசெய்பவனே தவிர, பணத்திற்காக படம் பண்ணுபவன் அல்ல என்று கூறியுள்ள பிரதாப் போத்தன் என்னை உற்சாகப்படுத்தாத திரைக்கதையில் ஒருபோதும் மனமொன்றி வேலைபார்க்க முடியாது என்றுதான் இந்தப்படத்தை ட்ராப் பண்ணி விட்டாராம்.. துல்கர் சல்மான் கேரியரில் இரண்டு முக்கியமான படங்களில் பங்களிப்பு செய்த அஞ்சலி மேனனாலேயே துல்கரின் படம் ட்ராப் ஆகியுள்ளது என்றால் அது உண்மையிலேயே அதிர்ச்சியான செய்திதான். இதற்கு அஞ்சலி மேனன் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.