‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான நிகழ்வு இது என்கிறார்கள் மோகன்லால் ரசிகர்களே.. எந்த விஷயத்தில்..? மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படங்கள் தான் 'ஒப்பம்' மற்றும் 'விஸ்மயா'.. ரஜினியின் 'கபாலி' படம் வெளியான தினத்தன்று தான் (ஜூலை-22) இந்த இரண்டு படங்களின் ட்ரெய்லர்களும் ஒரே நேரத்தில் கபாலி படத்துடனேயே சேர்த்து வெளியிடப்பட்டன. மோகன்லாலின் இரண்டு படங்களின் ட்ரெய்லர்கள் ஒரே நேரத்தில் வெளியாவதே ஒரு ஆச்சர்யம் தான்.
ஆனால் அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் அவற்றில் 'ஒப்பம்' பட ட்ரெய்லர் இந்த இரண்டு நாட்களில் யூடியூப்பில் கிட்டத்தட்ட 4லட்சத்து 47 ஆயிரம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் 'விஸ்மயா' பட ட்ரெய்லரோ வெறும் 67 ஆயிரம் பார்வையாளர்களையே யூடியூப்புக்கு வரவழைத்திருக்கிறது. இரண்டும் மோகன்லால் படம் தான் என்றாலும் ஏனிந்த வித்தியாசம்..? 'விஸ்மயா' படத்தை பொறுத்தவரை அது தெலுங்கு இயக்குனரான சந்திரசேகர் ஏலெட்டி என்பவரின் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க தெலுங்கில் உருவாகியுள்ள 'மனமந்தா' படத்தின் டப்பிங் படமாகவே ரசிகர்கள் கருதுகிறார்கள்..
ஆனால் அதேசமயம் 'ஒப்பம்' படம் மோகன்லாலின் திக் பிரண்ட் ஆன பிரியதர்ஷனின் படைப்பு. அதனாலேயே இயல்பான ஒரு எதிர்பார்ப்பு இந்தப்படத்துக்கு ரசிகர்களிடம் எழுந்தது.. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் ட்ரெய்லரை 'பிரேமம்' புகழ் அல்போன்ஸ் புத்ரன் எடிட் பண்ணியுள்ளார் என்பதும்கூட இந்த ட்ரெய்லர் இவ்வளவு பார்வையாளர்களை வரவழைக்க முக்கிய காரணம்.. ட்ரெய்லரை பார்த்தவர்களின் கமெண்ட்டுகளில் சூப்பர் என்கிற வார்த்தையுடன், அல்போன்ஸ் புத்ரனையும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள்.. இதை உணர்ந்துதானோ என்னவோ, “இந்த நேரத்தில் 'ஒப்பம்' படத்தின் ட்ரெய்லரை தொகுத்த அல்போன்ஸ் புத்ரனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” என மனதார பாராட்டியுள்ளார் மோகன்லால்.