‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாள நடிகை மஞ்சுவாரியரின் தனித்த அடையாளமே நாட்டிய நாடகம் தான். அதன் மூலம் தான் அவர் சினிமாவுக்கு வந்தார். திலீப்பை திருமணம் செய்தார். ஒரு குழந்தைக்கு தயானார். பின்னர் விவாகரத்து செய்தார். மீண்டும் நடிக்க வந்தார். இத்தனைக்கும் பிறகு மீண்டும் நாட்டிய நாடகத்தின் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.
பிரபல மலையாள நாடக எழுத்தாளர் காவலம் நாராயண பணிக்கர் 'அபிஞான சகுந்தலா' என்ற நாட்டிய நாடகத்தை எழுதினார். இதில் நடிகை மஞ்சுவாரியரை ஆட வைத்து அந்த நாடகத்தை அரங்கேற்ற நினைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்து விட்டார். நாராயண பணிக்கரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருந்த மஞ்சுவாரியருக்கு இந்த செய்தி கிடைத்ததும். அவரது நாடகத்தை தானே இயக்கி, ஆடி அரங்கேற்றம் செய்ய முடிவு செய்தார்.
மஞ்சுவாரியரின் மான மஞ்சுவாரியர் புரொடக்ஷன் சார்பில் தானே அதை தயாரித்து அரங்கேற்றம் செய்ய முடிவு செய்தார். பல நாள் ஒத்தகை நடத்திய பிறகு திருவனந்தபுரத்தில் அரங்கேற்றம் செய்தார். முதல்வர் பிரணாய் விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நாட்டிய நாடகத்தை கேரளா முழுவதும் நடத்த மஞ்சுவாரியர் முடிவு செய்திருக்கிறார்.