ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
இனி வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து விடுவது என்கிற முடியில் இருக்கிறாராம் மலையாள இயக்குனர் சித்திக்.. கடந்த வருடம் மம்முட்டியை வைத்து 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்கிற ஹிட் படத்தை கொடுத்த சித்திக், இந்த வருடத்தில் தனது பங்களிப்பாக திலீப் நடித்த 'கிங் லயர்' படத்தில் ஸ்க்ரிப்ட்டை மட்டும் எழுதிக்கொடுக்க, இவரது நண்பர் லால் அந்தப்படத்தை இயக்கினார். ஆனால் இந்த வருடத்தில் தனது பங்காக ஒரு படத்தை இயக்க முடிவுசெய்துள்ளார் சித்திக்..
இந்தப்படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா தான் நடிக்கிறார் என்பதும் ஏற்கனவே முடிவாகிவிட்டது.. சித்திக் டைரக்சனில் ஜெயசூர்யா நடிப்பது இதுவே முதன்முறை. இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டை தற்போது இலங்கையில் முகாமிட்டு எழுதிவருகிறார் சித்திக். படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் தான் துவங்க உளது.. மற்றபடி இலங்கையும் லொக்கேஷன் லிஸ்ட்டில் சேருமா, இல்லை கதை எழுதுவதற்காக மட்டும் தான் சித்திக் அங்கு சென்றாரா என்பது இனிமேல் தான் தெரியவரும். இந்தப்படத்தை சித்திக்கே தனது எஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.