விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
இதுவரை 149 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் என்ற தனிக்கட்சியை தொடங்கி, அதையடுத்து காங்கிரசில் இணைந்து மத்திய அமைச்சரானார். ஆனால் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்ற அவர், மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். முன்னதாக தனது மகன் ராம்சரண்தேஜா தெலுங்கில் நடித்த புருஸ்லீ என்ற படத்தில் நட்புக்காக ஒரு சிறிய வேடத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்த சிரஞ்சீவி தற்போது தனது 150 வது படமான கத்திலன்டோடு படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் விஜய் நடித்து வெளியான கத்தி படத்தில் ரீமேக்கான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பதால் முன்பிருந்த வேகம் அவரிடத்தில் இருக்காது என்றுதான் ஆந்திர ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சிக்காக அவரை வைத்து ஒரு எபிசோட் படமாக்கியுள்ளனர். அதில் தனது முந்தைய சூப்பர் ஹிட் படங்களில் தான் நடித்த சில காட்சிகளில் மீண்டும் அதே வேகத்துடன் நடித்துக்காட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி விட்டாராம் சிரஞ்சீவி.