‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இசையமைப்பாளர்கள் எல்லாம் ஹீரோக்களாக மாறிவரும்போது எடிட்டர்கள் எல்லாம் இயக்குனர்களாக மாறக்கூடாதா என்ன..? இன்றைய சினிமாவின் பெரும்பாலான எடிட்டர்கள் பலரும், டைரக்சன் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு, வந்த இடத்தில் எடிட்டர் ஆனவர்கள் தானே.. எடிட்டர் மகேஷ் நாராயணனும் அந்தவிதமாகவே இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார். கமலின் 'விஸ்வரூபம்', பிருத்விராஜின் 'என்னு நிண்டே மொய்தீன்' என இவர் படத்தொகுப்பு பண்ணிய இரண்டு படங்களே, இவர் எவ்வளவு திறமையான வேலைக்காரர் என்பதை நமக்கு சொல்லிவிடும்.
ஆனால் இவர் இயக்குனராக அடியெடுத்து வைப்பது மலையாளத்தில் தான். குஞ்சாக்கோ போபன் தான் இவரது படத்தின் ஹீரோ.. குஞ்சாக்கோ நடித்த பல படங்களுக்கு எடிட்டிங் பண்ணியதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்தப்படத்தில் குஞ்சாக்கோவுக்கு ஜோடியாக, முதன்முறையாக அவருடன் இணைந்து நடிக்கிறார் பார்வதி.. துல்கருடனான 'சார்லி' படத்திற்குப்பின் வேறெந்த படங்களிலும் கமிட்டாகாத பார்வதி, மகேஷ் நாராயணன் சொன்ன கதை பிடித்துப்போனதால் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். படத்தின் முக்கிய காட்சிகளை ஈராக்கின் தலைநகரான பாக்த்தாத்தில் படமாக்க இருக்கிறர்களாம். அந்தவகையில் பாக்தாத்தில் படமாக்கப்படும் முதல் மலையாளப்படமும் இதுதானாம்.