‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல கன்னட நடிகை மைத்ரி கவுடா அடிக்கடி பரபரப்பை கிளப்புகிறவர். மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மகன் தன்னை காதலித்து ஏமாற்றியதாக சமீபத்தில் பரபரப்பு கிளப்பினார். கடந்த 2011ம் ஆண்டு மைத்ரி செல்போனில் பேசியபடி தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது விஜயநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் மணியில் இருந்த காவலர் சிவகுமார் கரை மறித்து செல்போன் பேசியபடி கார்ஓட்டக்கூடாது என்று கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மைத்ரி காரை விட்டு இறங்கி காவலர் சிவகுமாரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதோடு பளார் என கன்னத்தில் அறைந்தார். இதை தடுக்க வந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜண்ணாவுக்கும் ஒரு பளார் விட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த விஜயநகர போலீசார் பெங்களூரு 5வது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மைத்ரி மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரி மற்றும் தோழிகள் 4 பேருக்கு தலா ஒரு வருடம் சிறை தண்டணையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து மைத்ரி கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது. அவர் உடனடியாக உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.