‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாகுபலி 2 திரைப்படம் உருவாகி வருகின்றது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகின்றார். ராஜமௌலி தனது விருப்ப நடிகரான ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு வரலாற்று படம் எடுக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பாகுபலி 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜெயதேவ் ராணா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதே கதாபாத்திரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வேறு ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்கவும் ராஜமௌலி திட்டமிட்டுள்ளாராம். 2017 ஏப்ரல் 14ல் பாகுபலி 2 திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி ஜூனியர் என்.டி.ஆரின் ஸ்டூடன்ட் நம்பர் 1, சிமஹட்ரி, யம டொங்கா போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.