இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 24 படம் மே 6ல் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளிவருகின்றது. தெலுங்கில் மனம் படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் விக்ரம் குமார் இப்படத்தை இயக்கியுள்ளதால் தெலுங்கு திரை உலகிலும் 24 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா மற்றும் நித்யா மேனன் இப்படத்தில் நடித்துள்ளனர். இதனால் தமிழகத்தைப் போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் 24 படத்தின் புரமோஷனில் சூர்யா தீவிர கவனம் செலுத்தி வருகின்றார். ஐதராபாத்தில் 24 படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட சூர்யா டோலிவுட்டின் பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸிடம் மூன்று படத்திற்கான கதைகள் கேட்டுள்ளதாகவும் அவை இன்னும் பேச்சு வார்த்தை நிலையிலேயே இருப்பதாகவும் விரைவில் திரிவிக்ரம் படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.