Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நடிகை பாமாவை ஏமாற்றிய பலே கில்லாடி..!

26 ஏப், 2016 - 08:45 IST
எழுத்தின் அளவு:
Actress-bhama-was-cheated.......

பெரிய நகரங்கள் மட்டுமல்லாது மீடியமான நகரங்களில் உள்ள துணிக்கடை, நகைக்கடைகள் கூட தங்களது கடைகளை சினிமா நடிகைகள் திறந்துவைத்தால் நன்கு பிரபலமாகும் என நினைப்பது வாடிக்கைதான். இதற்கு முன்னணி நடிகைகள் முதல் இரண்டாம் தட்டு நடிகைகள் வரை அவர்களது பாப்புலாரிட்டிக்கு ஏற்றவகையில் ஊதியம் பெற்றுக்கொள்வார்கள்.. ஆனால் இப்படித்தான் கேரளாவில் துணிக்கடை திறப்புவிழாவில் கலந்துகொள்ள பாமாவை ஒப்பந்தம் செய்து பணத்தை ஏமாற்றியதோடு, துணிக்கடை முதலாளியையும் ஏமாற்றி இருக்கிறான் பலே கில்லாடி ஒருவன்.


நேற்றைய தினம் கேரளா மாநிலம் மூவாட்டுப்புழாவில் உள்ள துணிக்கடையை திறந்துவைக்க மலையாள நடிகை பாமா வந்திருந்தார். ஆனால் வந்தவர் நீண்டநேரமாக காரைவிட்டு இறங்காமல் முரண்டுபிடித்தார். இந்த விழாவில் கலந்துகொள்ள பாமாவுக்கு 1 லட்ச ரூபாய் சம்பளம் பேசப்பட்டு அதில் 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸாக கொடுக்கப்பட்டதாகவும், மீதியை கடைதிறப்பு விழாவின்போது தருவதாகவும் பேசப்பட்டு இருந்ததாம். ஆனால் பாமாவோ திடீரென இரண்டரை லட்சம் ரூபாய் தந்தால் தான் கடைதிறப்பு விழாவுக்கு வருவேன் என அடம்பிடித்து காருக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டதாகவும் செய்தி ஒன்று வெளியில் பரவ, அதற்குள் பெருங்கூட்டம் அவரது காரை சூழ்ந்துகொண்டது..


உள்ளூர் முனிசிபல் சேர்மன் உஷா சசிதரன் என்பவர் தலையிட்டு, பாமாவை மீட்டு அவரிடம் விபரத்தை கேட்டார். அப்போது ராஜாமணி என்கிற ஈவென்ட் மேனேஜர் தன்னிடம் இந்த விழாவில் கலந்துகொள்ள சம்பளமாக 2.5 லட்ச ரூபாய் பேசியதாகவும் அதற்கு முன் தொகையாக ஒரு லட்ச ரூபாய் அக்கவுண்டில் போடுவதாக சொன்ன அந்த நபர், வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்தியதாகவும், கேட்டதற்கு இந்த விழாவில் சரிசெய்வதாகவும் கூறினாராம். அதை நம்பி வந்தால், இந்த விழாவில் அந்த நபர் எங்கேயும் தட்டுப்படவில்லை என்பதால் இந்த பிரச்சனை முடியாமல், விழாவில் கலந்துகொள்ள விரும்பாமல் தான், காரை விட்டு இறங்கவில்லை என்றும் கூறினா பாமா.


பின் துணிக்கடை அதிபரிடம் விசாரித்தபோதுதான், சம்பந்தப்பட்ட ராஜாமணி என்கிற நபர் பாமாவின் சம்பளமாக 1 லட்சம் பேசிவிட்டதாகவும், அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கவேண்டும் என வாங்கிச்சென்றதாகவும் அதில் 15 ஆயிரத்தை மாட்டும் பாமாவின் அக்கவுண்டில் செலுத்திவிட்டு மீதிப்பணத்துடன் எஸ்கேப் ஆனதும் தெரியவந்துள்ளது. இந்த விபரம் தெரியவந்ததும் சமாதனம் ஆன பாமா, அதன்பின் துணிக்கடை விழாவில் கலந்துகொண்டாராம். அதன்பின்னர் இந்த விவகாரத்தில் தான் பணத்திற்காக அடாவடி பண்ணியது போன்று செய்திகள் வெளியாகவே, தனது பேஸ்புக் பக்கத்தில் நடந்தது என்ன என விபரமாக குறிப்பிட்டு, நான் பணத்தை மதிப்பவள் அல்ல, மனிதர்களை மதிப்பவள் என விளக்கம் அளித்துள்ளார் பாமா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in