மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பெரிய நகரங்கள் மட்டுமல்லாது மீடியமான நகரங்களில் உள்ள துணிக்கடை, நகைக்கடைகள் கூட தங்களது கடைகளை சினிமா நடிகைகள் திறந்துவைத்தால் நன்கு பிரபலமாகும் என நினைப்பது வாடிக்கைதான். இதற்கு முன்னணி நடிகைகள் முதல் இரண்டாம் தட்டு நடிகைகள் வரை அவர்களது பாப்புலாரிட்டிக்கு ஏற்றவகையில் ஊதியம் பெற்றுக்கொள்வார்கள்.. ஆனால் இப்படித்தான் கேரளாவில் துணிக்கடை திறப்புவிழாவில் கலந்துகொள்ள பாமாவை ஒப்பந்தம் செய்து பணத்தை ஏமாற்றியதோடு, துணிக்கடை முதலாளியையும் ஏமாற்றி இருக்கிறான் பலே கில்லாடி ஒருவன்.
நேற்றைய தினம் கேரளா மாநிலம் மூவாட்டுப்புழாவில் உள்ள துணிக்கடையை திறந்துவைக்க மலையாள நடிகை பாமா வந்திருந்தார். ஆனால் வந்தவர் நீண்டநேரமாக காரைவிட்டு இறங்காமல் முரண்டுபிடித்தார். இந்த விழாவில் கலந்துகொள்ள பாமாவுக்கு 1 லட்ச ரூபாய் சம்பளம் பேசப்பட்டு அதில் 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸாக கொடுக்கப்பட்டதாகவும், மீதியை கடைதிறப்பு விழாவின்போது தருவதாகவும் பேசப்பட்டு இருந்ததாம். ஆனால் பாமாவோ திடீரென இரண்டரை லட்சம் ரூபாய் தந்தால் தான் கடைதிறப்பு விழாவுக்கு வருவேன் என அடம்பிடித்து காருக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டதாகவும் செய்தி ஒன்று வெளியில் பரவ, அதற்குள் பெருங்கூட்டம் அவரது காரை சூழ்ந்துகொண்டது..
உள்ளூர் முனிசிபல் சேர்மன் உஷா சசிதரன் என்பவர் தலையிட்டு, பாமாவை மீட்டு அவரிடம் விபரத்தை கேட்டார். அப்போது ராஜாமணி என்கிற ஈவென்ட் மேனேஜர் தன்னிடம் இந்த விழாவில் கலந்துகொள்ள சம்பளமாக 2.5 லட்ச ரூபாய் பேசியதாகவும் அதற்கு முன் தொகையாக ஒரு லட்ச ரூபாய் அக்கவுண்டில் போடுவதாக சொன்ன அந்த நபர், வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்தியதாகவும், கேட்டதற்கு இந்த விழாவில் சரிசெய்வதாகவும் கூறினாராம். அதை நம்பி வந்தால், இந்த விழாவில் அந்த நபர் எங்கேயும் தட்டுப்படவில்லை என்பதால் இந்த பிரச்சனை முடியாமல், விழாவில் கலந்துகொள்ள விரும்பாமல் தான், காரை விட்டு இறங்கவில்லை என்றும் கூறினா பாமா.
பின் துணிக்கடை அதிபரிடம் விசாரித்தபோதுதான், சம்பந்தப்பட்ட ராஜாமணி என்கிற நபர் பாமாவின் சம்பளமாக 1 லட்சம் பேசிவிட்டதாகவும், அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கவேண்டும் என வாங்கிச்சென்றதாகவும் அதில் 15 ஆயிரத்தை மாட்டும் பாமாவின் அக்கவுண்டில் செலுத்திவிட்டு மீதிப்பணத்துடன் எஸ்கேப் ஆனதும் தெரியவந்துள்ளது. இந்த விபரம் தெரியவந்ததும் சமாதனம் ஆன பாமா, அதன்பின் துணிக்கடை விழாவில் கலந்துகொண்டாராம். அதன்பின்னர் இந்த விவகாரத்தில் தான் பணத்திற்காக அடாவடி பண்ணியது போன்று செய்திகள் வெளியாகவே, தனது பேஸ்புக் பக்கத்தில் நடந்தது என்ன என விபரமாக குறிப்பிட்டு, நான் பணத்தை மதிப்பவள் அல்ல, மனிதர்களை மதிப்பவள் என விளக்கம் அளித்துள்ளார் பாமா.