மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த மாதம் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் ஜிம்ஸி என்கிற கேரக்டரில் க்யூட் பெண்ணாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் அபர்ணா பாலமுரளி. அந்தப்படத்தில் அபர்ணாவின் யதார்த்த நடிப்பையும், கோட்டயம் பஸ் ஸ்டாண்டில் அவர் ஆட்டும் அதிரடி ஆட்டத்தையும் பார்த்து அசந்து போன மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தனது புதிய படமான 'ஒரு முத்தச்சி கதா' படத்தின் கதாநாயகியாக அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.. இந்தப்படத்தின் நாயகனாக வினித் சீனிவாசன் நடிப்பார் என தெரிகிறது.. இதில் வினீத்திற்கு ஜோடியாக நடிப்பதைவிட, ஜூட் ஆண்டனியின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்காகவே அதிகம் சந்தோஷப்படுகிறார் அபர்ணா பலாமுரளி..
அதற்கு காரணமும் இருக்கிறது.. கடந்த 2013ல் தனது முதல்படமான 'ஓம் சாந்தி ஒசானா'வை இயக்கினார் ஜூட் ஆண்டனி. 'நேரம்' படத்திற்குப்பின் அதன் வெற்றி ஜோடியான நிவின்பாலி, நஸ்ரியா இருவரும் இதில் இணைந்து நடித்திருந்தனர்.. இதில் முக்கிய அம்சமே, படத்தின் கதையானது, நாயகன் நிவின்பாலியைவிட நாயகி நஸ்ரியாவை சுற்றியே பின்னப்பட்டிருக்கும். மேலும் நாயகியின் கதைசொல்லலில் தான் படமே நகரும். அதைப்போலவே 'ஒரு முத்தச்சி கதா' படத்திலும் தனக்கு பிரதான ரோல் இருக்கிறது என்பதுதான் அபர்ணாவின் சந்தோஷத்துக்கு காரணம். வயதான இரண்டு பெண்களின் கனவுகள், ஆசைகள், லட்சியங்களை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.