மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அங்காடி தெரு படத்தின் வாயிலாக தமிழில் நடிகையாக அறிமுகமான அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நேரத்தில் பல பிரச்சனைகளில் சிக்கி, மீண்டு வந்துள்ளார். அஞ்சலி தற்போது கை நிறைய படங்களுடன் நடித்து வருகின்றார். அஞ்சலி விமலுடன் இணைந்து நடித்துள்ள மாப்ள சிங்கம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும் இறைவி, தரமணி, பேரன்பு, காண்பது பொய் போன்ற படங்களில் அஞ்சலி நடித்து வருகின்றார். தெலுங்கில் சித்ரங்கதா என்ற திகில் படத்திலும் அஞ்சலி நடிக்கின்றார். இப்படம் தமிழில் யார் நீ என்ற பெயரில் வெளிவரவுள்ளது. இயக்குனர் அஷோக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை அஞ்சலி பாடல் ஒன்றும் பாடியுள்ளாராம். பாடகர் செல்வ ஸ்வாமிநாதனுடன் இணைந்து அஞ்சலி அப்பாடலைப் பாடியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும் இப்படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.