ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா பெங்களூர் நாட்கள் படத்தில் தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்து விட்டார். பெங்களூர் நாட்கள் புரமோஷனில் கலந்து கொண்ட ராணா, தனது திருமணம் குறித்த கேள்விக்கு வேடிக்கையாக பதிலளித்துள்ளார். தெலுங்கு படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வந்த ராணா பாகுபலி மற்றும் பெங்களூர் நாட்கள் படங்களின் வெற்றிக்கு பின்னர் தமிழிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
ராணாவின் அடுத்த படங்கள் என்ன என்று கேட்பது போல் எப்போது திருமணம் என்ற கேள்வியும் அவரிடம் அடிக்கடி கேட்கப்படுகின்றது. இதற்கு அண்மையில் பதிலளித்த ராணா, பாகுபலி 2 படத்தை பார்த்த பின்னர் யாரும் என்னை திருமணம் செய்ய முன்வரமாட்டார்கள் என நகைச்சுவையுடன் கூறியுள்ளார். மேலும் தெலுங்கில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால் அவற்றை முடித்த பின்னரே திருமணம் குறித்து யோசிக்கவுள்ளதாகவும் ராணா கூறியுள்ளார்.