‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த வருடம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படம் வெளியானது. தமிழில் முதல் படத்தில் தடுமாறிய துல்கரை நிலைநிறுத்தவும், சில சரிவுகளில் இருந்து மணிரத்னம் மீண்டு(ம்) வரவும் இந்தப்படம் ரொம்பவே உதவியது. குறிப்பாக இளைஞர்களை இந்தப்படம் ரொம்பவே கவர்ந்தது. தற்போது இந்தியிலும் இந்தப்படம் ரீமேக்காக இருக்கிறது. இதில் துல்கர் கதாபாத்திரத்தில் ஆதித்ய ராய் கபூரும் நித்யா மேனன் கேரக்டரில் ஷ்ரதா கபூரும் நடிக்க இருக்கிறார்கள்..
பொதுவாக ரீமேக் படங்களில் நடிக்கும் பல ஹீரோக்கள் அதன் ஒரிஜினலை பார்க்கவே மாட்டார்கள்.. இன்னும் சிலரோ அதை ஒரு தடவைக்கு பலதடவை பார்த்து, ஒரிஜினலில் இருந்து தங்களை டோட்டலாக மாற்றிக்கொள்வார்கள்.. ஆதித்ய ராய் கபூர் எப்படியோ தெரியாது, ஆனால் 'ஒகே கண்மணி'யை பார்த்த அவர், துல்கரின் நடிப்பை கண்டு மிரண்டுபோய் விட்டாராம். படம் பார்த்துவிட்டு, “துல்கர், நித்யா இருவரும் அவர்களது 'தி பெஸ்ட்'டை தந்துள்ளார்கள் எனக்கு இன்னும் பொறுப்பு கூடியுள்ளது.. ஆனால் எங்கள் கையில் தான் பக்காவான புளூ பிரிண்ட்டே இருக்கிறதே” என்று சொன்னதுடன் துல்கர் சல்மானை நேரில் சந்திக்கும் தனது ஆவலையும் வெளிப்படுத்தியுள்ளாராம்.