ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
வரும் வெள்ளியன்று மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள 'பாவாட' படம் வெளியாக இருக்கிறது.. கடந்த வருடம் தொடர்வேர்ரிகளாக ருசித்த பிருத்விராஜ், இந்த வருடமும் தனது முதல் படமான 'பாவாட' படத்தில் இருந்தே வெற்றியை துவங்க தீர்மானித்துள்ளார். அவரது தீர்மானம் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது உண்மைதானென்று தெளிவாக தெரிகிறது.. ஜி.மார்த்தாண்டன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிஜூ மேனன், மியா ஜார்ஜ் என 'அனார்கலி' கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.. இந்தப்படத்தை தயாரித்திருப்பவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மணியம்பிள்ளை ராஜூ.
இந்தப்படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் சொல்லப்பட்டபோது அது பிருத்விராஜை திருப்திப்படுத்தவில்லை. இதனால் மூன்று முறை திரைக்கதையில் மாற்றம் செய்தும் இதே நிலைதான் நீடித்தது. பிருத்விராஜ், தயாரிப்பாளர் மணியம்பிள்ளை ராஜுவிடம், “கதை நன்றாகத்தான் இருக்கிறது.. ஆனால் நம் இருவர் கூட்டணியில் இருந்து உருவாகும் படம் இது அல்ல.. வேண்டுமானால் என்னைக்காட்டிலும் சிறந்த நடிகர்கள் இதில் நடிப்பார்கள்.. அவர்களை அணுகுங்கள்” என்று கூட சொல்லிப்பார்த்தாராம். ஆனால் மணியம்பிள்ளையோ பிருத்விராஜ் தான் நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் நான்காவது முறையாக கதாசிரியர் பிபின் சந்திரனை வைத்து முற்றிலும் புதிதான ஒரு திரைக்கதையை எழுத வைக்க அது பிருத்விராஜுக்கு ரொம்பவே பிடித்துப்ப்போனதாம். இதுதான் பாவாட்' உருவான கதை என்கிறார் மணியம்பிள்ளை ராஜூ.