அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் |
நடிகை சமந்தா, விஜய் தேவர கொண்டவுடன் நடித்த குஷி படத்திற்கு பிறகு தெலுங்கில் தான் தயாரித்திருந்த சுபம் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அடுத்து மா இண்டி பங்காரம் என்ற படத்தை தயாரித்து, கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கும் ஒரு ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார் சமந்தா. இதற்கிடையில் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரை சமந்தா காதலிப்பதாக தொடர்ந்து சோசியல் மீடியாவில் பரபரப்பு செய்தி வெளியாகி கொண்டு வருகிறது. என்றாலும் அவர் இது குறித்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் சமந்தா, தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் தான் சந்தித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதோடு, நாம் எதைப் பற்றி பேச தேர்வு செய்கிறோமோ, அதுவே நாம் வடிவமைக்கும் பொருளாக மாறுகிறது என்றும் ஒரு பதிவு போட்டு உள்ளார் சமந்தா.