மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'கிரவுட் புல்லர்' அதாவது கூட்டத்தை இழுப்பவர் என்கிற பட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு நிவின்பாலிக்கு சூட்டி சென்றிருக்கிறது.. வரிசையாக ஹிட், சூப்பர் ஹிட், பிளாக் பஸ்டர் ஹிட் என ரகம் வாரியாக வெற்றிகளை குவித்து வருகிறார்.. அதனாலேயே பல இயக்குனர்கள் இவரிடம் கதைசொல்வதற்காக படையெடுத்தும் வருகிறார்கள்.. அப்படி கதை சொல்ல வந்த இயக்குனர்களில் சிலர், நிவின்பாலி தங்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டதாக மலையாள திரைப்பட இயக்குனர் சங்கமான 'பெப்கா'வில் புகார் கொடுத்தும் உள்ளனர்..
இரண்டு தினங்களுக்கு முன் மலையாள மனோரமா சேனலின் கடந்த 2015ஆம் வருடத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.. இதில் நிவின்பாலிக்கு 2015ஆம் வருடத்தின் சிறந்த நியூஸ்மேக்கர் என்கிற விருது வழங்கப்பட்டது.. அப்போது அவரிடம் உரையாடிய இயக்குனர் ஹரிகுமார் அவர் மீது சில இயக்குனர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு பற்றி கேள்வி எழுப்பினார்.. அதற்கு பதிலளித்த நிவின்பாலி, தான் இயக்குனர்களை மதிப்பவன் என்றும், யாரிடமும் தரக்குறைவாக நடந்துகொள்பவன் அல்ல என்றும், அப்படி எவரது மனமும் புண்படும் விதமாக தனது நடவடிக்கை இருந்திருக்குமேயானால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.