மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழக தலைநகர் சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள நடிகர்களுக்கும் முன்வந்துள்ளனர். டோலிவுட்டின் பிரபல நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜுனியர் என்.டி.ஆர், கல்யாண் ராம், சாய் தரண் தேஜ், வருன் தேஜ் என பலரும் தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்துள்ளனர். பாகுபலி படத்தின் வாயிலாக புகழ் பெற்ற அப்படத்தின் நாயகன் பிரபாஸிற்கு தமிழகத்தில் அனேக ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பாகுபலி நாயகன் பிரபாஸ் தமிழகத்திற்கு நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் வழங்க முன்வந்துள்ளார். பிரபாஸ் தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகின்றார்.