‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்தில் காஞ்சனமாலா - மொய்தீன் உண்மை காதல்கதையை வைத்து வெளியாகி ஹிட்டான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில், எப்படி பிருத்விராஜ் தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என காஞ்சனமாலா சொன்னாரோ, அதேபோல காஞ்சனமாலா கதாபாத்திரத்தில் நடிக்க பார்வதி தான் சரியான நபராக இருப்பார் என முடிவுசெய்த இயக்குனர் ஆர்.எஸ்.விமல் வேறெந்த சமரசமும் செய்துகொள்ளாமல் அவரையே நடிக்கவைத்தார். அவரும் படத்தில் காஞ்சனமாலாகவே வாழ்ந்திருந்தார். இப்போது மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதிலும் மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்ட த்ரிஷ்யம்' புகழ் டெரர் நாயகி ஆஷா சரத், தானும் ஒருகாலத்தில் காஞ்சனமாலாவாக நடித்த கதையை ஒரு பேட்டியின்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது 21 வருடங்களுக்கு முன்பு அவர் கல்லூரியில் படித்துவந்த காலகட்டத்தில் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தாராம். அந்தசமயத்தில் காஞ்சனமாலா - மொய்தீன் கதை கல்லூரி மாணவர்களிடையே ரொம்பவும் பேமஸாம்.. அப்போது காஞ்சனமாலா - மொய்தீன் காதல்கதை பற்றி அப்போது ஒரு டெலிபிலிம் எடுக்கப்பட்டபோது அதில் காஞ்சனமாலாவாக நடித்தவர் ஆஷா சரத் தானாம். தான் பல வருடங்களுக்கு முன் நடித்த ஒரு கதாபாத்திரம் இப்போது சென்சேஷனல் செய்தியானது குறித்து சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஆஷா சரத்.