மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இல்லை.. இல்லை.. தமிழ்நாட்டில் வெளியான 'கத்துக்குட்டி' படத்தின் இயக்குனருக்கும் இந்த செய்திக்கும் துளியும் சம்பந்தமில்லை.. இது விஷயமே வேறு. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொச்சியில் 'கிஸ் ஆப் லவ்' என்ற போராட்டத்தை நடத்தி 'யுக புரட்சி' ஒன்றை ஆரம்பித்து வைத்த ராகுல் பசுபாலனும் அவரது மனைவி ரேஷ்மி நாயரும் சில தினங்களுக்கு முன் ஆன்லைனில் விபச்சார வியாபாரம் நடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார்கள் அல்லவா..? பொதுச்செய்தியில் இடம்பிடித்த இந்த சம்பவம், இதை அவர்கள் சினிமாவுக்காத்தான் செய்தோம் என கூறியதில் இருந்து சினிமா செய்தியில் இடம்பெறுவதற்கான அந்தஸ்தை பெற்றுவிட்டது. இதன் பின்னணியில் ஒளிந்துள்ள கதையை கேட்டால் தலை சுற்றுகிறது சாமி.
கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள காபி பார் ஒன்றில் இளைஞர்கள் என்கிற பெயரில் ஆண்களும் பெண்களும் மோசமாக நடந்துகொள்வதாக கூறி, ஒரு கும்பல் அந்த கடையை அடித்து உடைத்து, அங்கிருந்தவர்களையும் தாக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாடல் அழகி ரேஷ்மி நாயரும், அவரது கணவர் ராகுல் பசுபாலனும் 'கிஸ் ஆப் லவ்' என்கிற பெயரில் பொது இடத்தில் முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்தி மிகவும் பிரபலம் ஆனார்கள். இவர்களின் போராட்டாத்தால் கவரப்பட்ட தொழிலதிபர் மனோஜ் கே.ஸ்ரீதர் என்பவர், அவரது எண்ணமும் அவர்களைப் போலவே இருந்ததால் தனது மனைவியுடன் அவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தார். அப்படியே வளர்ந்த நட்பு இன்ட முத்தப்போராட்டத்தை மையமாக வைத்து ரேஷ்மி நாயர், ராகுல் இயக்கத்தில் கதையில் 'ப்ளிங்' என்கிற ஒரு படத்தை தயாரிக்க மனோஜ் ஒப்புக்கொள்ளும் எல்லைவரை சென்றது.
படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கிலேயே ராகுலுக்கு டைரக்சன் அனுபவம் இல்லை என்பதும், அந்த கதையும் ரேஷ்மி நாயர் எழுதவில்லை என்பதும் மனோஜுக்கு தெரியவந்தது.. ஆனாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்துள்ளது. அதுமட்டுமல்ல 80 லட்ச ரூபாயில் தயாரித்துவிடலாம் என சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை கோடி வரை பட்ஜெட் நீண்டதாம். ஒருகட்டத்தில் பணம் அதிகம் செலவாவதை உணர்ந்து படத்தை நிறுத்தினார் மனோஜ். அப்போது ராகுலும், ரேஷ்மியும் இன்டர்நெட் மூலமாக செக்ஸ் ராக்கெட்டை ஆரம்பித்து பிரபலங்களை வளைத்து, அவர்களை பிளாக் மெயில் செய்து பணம் புரட்டலாம் என கூறினார்களாம். ஆனால் விளையாட்டாகத்தான் பேசுகிறார்கள் என நினைத்த தயாரிப்பாளர், அவர்களை வெளியே அனுப்பி கதவை சாத்திவிட்டாராம்.
ஆனால் இப்போது ஆன்லைன் விபச்சார வழக்கில் கைதாகியுள்ள ராகுலும் ரேஷ்மி நாயரும் சினிமா தயாரித்து அதனால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காகத்தான் தாங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டதாக விசாரணையில் கூறியுள்ளார்களாம். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மனோஜோ, “படத்தை தயாரித்தது நான்.. செலவு அதிகமாகிவிட்டது என படத்தை நிறுத்தியது நான்.. அப்படி இருக்கையில் படம் எடுத்ததால் தான் கடன் ஆகிவிட்டது.. அதனால் தான் இந்த தொழிலை ஆரம்பித்தோம் என இவர்கள் கூறுவது சுத்தமான ஏமாற்று வேலை” என பதிலடி கொடுத்துள்ளார். திறமையான உதவி இயக்குனர்கள் வாய்ப்பு கிடைக்காமல் வருடக்கணக்கில் சுற்றிக்கொண்டு இருக்க, ஏமாற்றும் நபர்களின் பிடியில் ஒரு தயாரிப்பாளர் சிக்கிய சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.