ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிப்பில் உருவாகியுள்ள குமாரி 21F திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் ராஜ் தருண் இயக்குனர் பூரி ஜெகன்நாத் எழுதிய கதையின் நாயகனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இப்படத்தை பிரபல நடிகை ரேவதி இயக்கவுள்ளார். தற்போது பூரி ஜெகன்நாத் மற்றும் ராஜ் தருண் இப்படத்திற்கான கதை விவாதத்திற்காக பேங்காங் சென்றுள்ளனர். இப்படத்திற்காக பூரி ஜெகன்நாத் கதை மற்றும் வசனங்கள் மட்டுமே எழுதவுள்ளார்.ரேவதியே இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை பூரி ஜெகன்நாதே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. நடிகர் வருண் தேஜ் நடிப்பில் லோபர் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.