மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லாலை ஹீரோவாக்காமல் விடமாட்டார்கள் போல தெரிகிறதே.. தனக்கு நடிப்பில் இன்ட்ரெஸ்ட் இல்லை, டைரக்சனில் தான் ஆர்வம் என்று அவரும் சொல்லிச்சொல்லி தவித்துப்போனார்., மகனின் ஆர்வம் டைரக்சனில் தான் என்பது தெரிந்ததும் மறுப்பேதும் சொல்லாமல், மகனே உன் சமத்து ஓகே சொன்ன மோகன்லால், தனக்கு 'த்ரிஷ்யம்' மூலம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஜித்து ஜோசப்பிடமே தொழில் கற்றுக்கொள்ள சொல்லிவிட்டார்.. 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கான 'பாபநாசம், திலீப் நடித்துள்ள 'லைப் ஆப் ஜோஸுட்டி' என இரண்டு படங்களில் ஜீத்துவிடம் வேலைபார்த்து முடித்துவிட்டார் ப்ரணவ்.
ஆனாலும் நடிகர் திலீப் சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “ப்ரணவ் தன்னுள்ளே நிறைய திறமைகளை வைத்துள்ளார். ஷூட்டிங்ஸ்பாட்டில் எந்த தரப்பினரும் அவரிடம் உதவி கேட்டால் உடனடியாக செய்துகொடுக்கும் அளவுக்கு விஷயம் தெரிந்தவர்.. அதைவிட நடிகனுக்கான சகல அம்சமும் அவரிடம் இருக்கிறது.. ஒருவேளை அவருக்கு நடிக்கும் ஆசை எதுவும் இருந்தால், அதற்கு இதுதான் சரியான நேரம்” என கூறியுள்ளார். அதேபோல அவரது குருநாதர் ஜீத்து ஜோசப்பும், ப்ரணவ் தனியாக படம் இயக்கும் அளவுக்கு தயாராகிவிட்டார்.. அவரது திறமைக்கு மிகச்சிறந்த படங்களை தருவார் என்பதில் சந்தேகமில்லை என சர்டிபிகேட் வழங்கிவிட்டார்.. ஆனால் இப்போது வரை டைரக்சன் தான் தனது பாதை என்பதில் தெளிவாக இருக்கிறார் ப்ரணவ் மோகன்லால்.