‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் அற்புதமான காதல் ஜோடியை பார்த்ததாக பிருத்விராஜையும் பார்வதியையும் கொண்டாடி தீர்க்கிறது கேரளா.. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த 'என்னு நிண்டே மொய்தீன்' திரைப்படம் கடந்த 19 நாட்களில் கேரளாவில் மட்டும் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது அதன் சாட்சி தான்... இந்தப்படத்தில் நடித்த சில நடிகர்கள் பார்வதியை பாராட்டித்தள்ள, அவரோ பிருத்விராஜின் நடிப்பு மற்றும் திறமையை பார்த்து வியந்துபோய் நிற்கிறார். பிருத்விராஜ் வருங்கலாத்தில் ஒரு மிகச்சிறந்த இயக்குனராக வருவார் என்றும் ஆருடம் கூறியுள்ளார் பார்வதி.
“மலையாளத்தில் உள்ள மிகச்சிறந்த நடிகர்களில் பிருத்விராஜ் முக்கியமானவர்.. அவருடன் நடிக்கும்போது ரொம்ப ஈசியாக உணர்ந்தேன்.. நம் பக்கம் உள்ள தவறுகளை தனது கண்களாலேயே சுட்டிக்காட்டும் வரம் அவருக்கு கிடைத்து இருக்கிறது. அதுமட்டுமல்ல சினிமாவில் எந்த ஏரியாவை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம்.. அந்த அளவுக்கு விரல் நுனியில் துல்லியமாக விஷயங்களை வைத்திருக்கிறார். அவரது திறமைக்கு அவர் ஏற்கனவே இயக்குனராகி இருந்திருக்க வேண்டும்.. அதனால் என்ன, எதிர்காலத்தில் ஒரு மிகச்சிறந்த இயக்குனராக வருவார்.. அருமையான படைப்பை தருவார் என்பது மட்டும் உறுதி” என பிருத்விராஜுக்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார் பார்வதி.