தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
மலையாள சினிமாவில் இதுவரையில்லாத பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் மிகப்பெரிய ஆக்சன் படம் தான் மோகன்லால் நடித்து வரும் 'புலிமுருகன்'. இதன் படப்பிடிப்பு கேரளாவின் பூயம்குட்டி பகுதியில் உள்ள பிண்டிமேடு குத்து என்கிற பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பகுதி வனத்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பூயம்குட்டி பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் 'புலிமுருகன்' படப்பிடிப்பால் அந்தப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் அந்த மனுவில் இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக, பாம் வெடிக்கும் காட்சி ஒன்றை எடுக்க இருப்பதாகவும் அதனால் இன்னும் சுற்றுச்சூழல் சீர்கேடு உருவாகும் என்றும், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்ததாம். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது பற்றி விசாரித்து, இதன் உண்மைத்தன்மை என்ன, முறையாக அனுமதி பெற்று படப்பிடிப்பு நடக்கிறதா என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு வன இலாகா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மனுதாரர் கூறியது உண்மை என தெரியவந்தால் 'புலிமுருகன்' படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றும், இதுவரை நடத்தியதற்காக அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.