‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
மலையாளத்தில் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் விரும்பப்படும் இளம் முன்னணி நடிகராக பஹத் பாசில் மாறிவிட்டார். நேற்று (ஜூலை 25) அவரும் வடிவேலுவும் இணைந்து நடித்த மாரீசன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. மாமன்னனுக்கு பிறகு தமிழில் தன்னை ஈர்த்த கதை இதுதான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார்.. மேலும் அவர் கூறும்போது, “மோகன்லால் படம் ஒன்றை ரீமேக் செய்து என்னை நடிக்க வையுங்கள்” என்று பிரபல இயக்குனரை தான் தொடர்ந்து நச்சரித்து வருவதாகவும் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் பஹத் பாசில். அந்த இயக்குனர் அமல் நீரத். இதற்கு முன்னதாக அயோபிண்டே புஸ்தகம் மற்றும் வரதன் என இரண்டு படங்களில் அமல் டைரக்சனில் பஹத் பாசில் நடித்துள்ளார்.
பஹத் பாசில் நடிக்க விரும்பியது 1989ல் மோகன்லால் நடிப்பில் பத்மராஜன் இயக்கத்தில் கல்ட் கிளாசிக் படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற 'சீசன்' படத்தை தான். “இந்தப் படத்தின் ரீமேக்கில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இயக்குனர் அமல் நீரத்திடம் அடிக்கடி இந்த படத்தின் ரீமேக்கை நீங்கள் இயக்குங்கள், நான் நடிக்கிறேன்.. எல்லாம் சரியாக அமைந்தால் நானே இந்த படத்தையும் தயாரிக்கிறேன் என்று அடிக்கடி நச்சரித்து வருகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல ரசிகர்கள் தவறவே விடக்கூடாது என ஐந்து படங்களை பட்டியலிடுங்கள் என அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய படங்களில் இதுவும் ஒன்று, இவற்றைத் தவிர ரஜினிகாந்தின் 'ஜானி', அமிதாப் பச்சனின் 'மிழி' இத்தாலிய படங்களான 'மலினா' மற்றும் 'II போஸ்டினோ ; தி போஸ்ட் மேன்' ஆகிய படங்களையும் குறிப்பிட்டுள்ளார். பஹத் பாசில்.