நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

மலையாள நடிகரான விநாயகன் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். குறிப்பாக கடந்த 2௦23ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து தென்னிந்திய அளவில் மிகப்பெரிய அளவிற்கு பிரபலமானார். அதே சமயம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையாக பேசி பிரச்னைகளில் சிக்கிக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் விநாயன்.
அந்த வகையில் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பதிவில், “தன் காலில் வலுவாக நிற்க முடியாத, கீழே விழுந்தால் நான்கு பேர் தூக்கி நிறுத்தக்கூடிய அளவிற்கு பலவீனமாக உள்ளவர்கள் எல்லாம் போதைப்பொருளை பயன்படுத்தாதீர்கள் என இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவதை பார்க்கும்போது சிரிப்பாகவும் அதேசமயம் சோகமாகவும் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
அவர் அப்படி கூறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் பிரபல மலையாள நடிகர் சீனிவாசன், பள்ளி மாணவர்கள் இடம் பெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த கருத்துக்களை கூறினார். அந்த மேடையில் இருந்து அவர் இறங்கிச் செல்லும் போது நடைபாதையில் திடீரென தடுமாறி விழுந்தார். இது குறித்து தான் விநாயகன் கூறினார் என்று பலரும் குறிப்பிட்டனர்.
அவர் சொல்வதைப் போல நடிகர் சீனிவாசன் தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பின் சிகிச்சை எடுத்து, தற்போது தான் ஓரளவு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதை குறிப்பிட்டு அவரை விநாயகன் கிண்டல் அடித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சலீம் குமாரின் மகன் சந்து, விநாயகனின் இந்த கருத்து பற்றி கூறும்போது, ''ஒரு முறை நடிகர் விநாயகனை நான் சந்தித்தபோது என்னிடம் அவர், இப்போது சீனியர் நடிகர்கள் என சொல்லப்படும் பல நடிகர்களும் என்னை ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே நிறுத்தி வைத்தனர். ஆனால் உன்னுடைய தந்தை தான் என்னை அவருக்கு அருகில் நிறுத்தி வைத்து பார்த்தவர். அந்த அளவிற்கு மிகவும் அன்பான மனிதர் அவர் என்று கூறினார்..
அப்படி என் தந்தையை பாராட்டிய அவர் தான் என்று இப்படி விமர்சனம் செய்கிறார். இதை என்னவென்று சொல்வது? மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தவர்கள் தான் அதுகுறித்து அறிவுரை சொல்ல தகுதியான நபர்கள். அது மட்டுமல்ல போதை விழிப்புணர்வு குறித்து ஏற்பாடு செய்யப்பட்டு இப்படி மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பேசும்போது எல்லோரும் மது அருந்துங்கள்.. உங்கள் உடலை கெடுத்துக் கொள்ளுங்கள் என்றா பேச முடியும்'' என்று வேதனையுடன் கூறியுள்ளார்.




